Site icon Tamil News

கனடாவில் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட இளைஞர்

சனிக்கிழமை இரவு கனடாவில் கீலே subway நிலையத்தில் ஒரு இளைஞனுக்கு எதிரான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் 22 வயது இளைஞன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரவு 9 மணிக்கு முன்னதாகவே நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது.

அந்த இளைஞர் ரயில் நிலையத்தின் கீழ் மட்டத்தில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தபோது, ஒரு நபர் அவரை அணுகி கத்தியால் குத்தியதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

தீவிரமான காயங்களுடன் அந்த இளைஞனை துணை மருத்துவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் டொராண்டோவைச் சேர்ந்த 16 வயதுடைய கேப்ரியல் மாகல்ஹேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நிலையான முகவரி இல்லாத 22 வயதான ஜோர்டான் ஓபிரைன்-டோபின் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று பொலிசார் கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version