Site icon Tamil News

எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையும் குறைவடையும் என அறிவிப்பு!

அமெரிக்க டொலரின் பெறுதிக்கு ஏற்ப எதிர்வரம் நாட்களில் எரிபொருளின் விலையும் குறைவடையும் என சபை முதல்வர சுஸில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று சர்வஜன வாக்குரிமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், தற்போதைய நிலைமையில் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைவடையும். எரிபொருள் விலையும் எதிர்வரும் நாட்களில் குறைவடையும்.

அடுத்ததாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் டொலரின் பெறுமதிக்கு ஏற்றால் போன்று இறக்கப்படும். இதன்போது விலை குறைவடையும்.

இது மக்களுக்கு கிடைக்கும். அதேபோன்று எதிர்வரும் ஜுன் மாதமளவில் மின் கட்டணமும் குறைவடையும் என்று மின் சக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

கிரீஸ்,ஆஜன்டீனா மற்றும் பாகிஸ்தான் நிலைக்கு   இலங்கை செல்லவில்லை. தற்போது டொலர் பெறுமதி குறைவடைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version