இந்தோனேஷியாவில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு 18 மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஜாவாவின் மாலாங் நகரில் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனால் 40 சிறார்கள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். பார்வையாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்ததையடுத்து அரங்கிலிருந்து பார்வையாளர்கள் வெளியேற முற்பட்டபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.