Site icon Tamil News

அரச சேவை ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார்

அரசியலமைப்பு சபையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  அரச சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார்

சனத் ஜெயந்த தலைமையிலான இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக திருமதி சித்தி  மரீனா மொஹமட், திரு நரசிங்க ஹேரத் முதியன்சலாகே சித்ரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமரன் ,திரு. மானிக்க படதுருகே ரொஹன புஷ்பகுமார, கலாநிதி . அங்கம்பொதி தமித நந்தனி டீ  சொய்ஷா , திருமதி. ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் திரு பல்லேகம சந்திரரத்னே பல்லேகம ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்

 

Exit mobile version