Site icon Tamil News

நாய் கடிக்கு மருந்து இல்லை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை உள்ளது மருத்துவமனைக்கு அச்சிறுப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்,

இந்நிலையில் இன்று நாய் மட்டும் எலி கடித்ததாக சிகிச்சை பெற இருவர் வந்தனர் அப்போது அங்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் நாய்க்கடி மற்றும் எலி கடிக்கு இங்கு மருந்து இல்லை மதுராந்தகம் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொள்,

என ஒருமையில் பேசி யார் வீட்டு நாய் கடித்ததோ அவர் வீட்டிலே சென்று சிகிச்சை பெற்றுக் கொள் என நோயாளிகளை மன உளைச்சல் ஏற்படுத்தி மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பி உள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அச்சிறுப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை உடனே மாற்றக்கோரி அப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்தனர்.

Exit mobile version