Site icon Tamil News

கூட்டு ஆயுத உற்பத்திக்கு பால்கன் நட்பு நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு

அல்பேனியாவில் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் கூட்டு ஆயுத உற்பத்தி மூலம் நாட்டுக்கு உதவ பால்கன் நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

உச்சிமாநாட்டில் தனது தொடக்க உரையில் அல்பேனியா, செர்பியா, வடக்கு மாசிடோனியா, கொசோவோ, போஸ்னியா, மாண்டினீக்ரோ, குரோஷியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளிடம், “உங்களுடனும் எங்கள் அனைத்து கூட்டாளிகளுடனும் இணைந்து தயாரிப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்” என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

” உக்ரைனில் சுமார் 500 பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன , அவை ஒவ்வொன்றும் பலம் சேர்க்கின்றன, ஆனால் புடினுக்கு எதிராக வெற்றி பெற இது போதாது. வெடிமருந்து விநியோகத்தில் உள்ள சிக்கல்களை நாங்கள் காண்கிறோம், இது போர்க்களத்தில் நிலைமையை பாதிக்கிறது எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Exit mobile version