Site icon Tamil News

சீனாவில் வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கமாக மாறியுள்ள யுனான் மாகாணம்

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜிங்பிங் கவுண்டியில் லட்சக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகளின் வருகையால் அப்பகுதி வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வண்ணத்துப்பூச்சிகளின் வருகை மே 18ஆம் திகதி முதல் தொடங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலை ஜூன் 20ம் திகதி வரை நீடிக்கும் என அந்நாட்டு வண்ணத்துப்பூச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு சுமார் 100 மில்லியன் பட்டாம்பூச்சிகள் அந்த பகுதியில் பிறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தில் உள்ள வானிலை, மரங்களின் நிலை, பூக்கள் மற்றும் உணவு ஆகியவற்றுடன்  உள்ள தொடர்பு  காரணமாக வண்ணத்துப் பூச்சிகள் படையெடுத்துள்ளதாக நிபுணர்களின் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version