உஸ்பெகிஸ்தானில் லிஃப்டில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
32 வயதான பெண் லிஃப்டில் 3 நாட்கள் சிக்கியிருந்த பின்னணியில் உயிரிழந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் தபால் ஊழியராக பணியாற்றிய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஜூலை 24 அன்று, அவர் வேலை முடிந்து வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரைக் கண்டுபிடிக்க கடுமையாக முயன்றனர்.
ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்காததால், தீவிர தேடுதலுக்கு பிறகு மறுநாள் லிஃப்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவருக்கு ஆறு வயது மகள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவில் தயாரிக்கப்பட்ட லிஃப்ட் பதிவு செய்யப்படாவிட்டாலும், அது இயங்கும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் நடந்த அன்று மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்றும், லிஃப்டில் ஏற்பட்ட சில கோளாறே இந்த சோகத்தை ஏற்படுத்தியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.