Site icon Tamil News

இலங்கையில் நிர்வாண ஒளிப்படங்களுடன் சிக்கிய இளம் பிக்கு!

இலங்கையில் சிறுவர், சிறுமியரின் நிர்வாண ஒளிப்படங்களை விற்பனை செய்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் சம்பாதிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

ராகமை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் அடங்கிய படங்களை விற்பனை செய்து வருவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அவர் குறித்த படங்களை விற்பனை செய்து கிரிப்டோகரன்சி மூலம் பணம் சம்பாதிப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டிற்கு அமைய நேற்று (19.09) அப்பகுதிக்கு சென்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குறித்த விகாரையை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த விகாரையில் இருந்த 19 வயதுடைய இளம் பிக்கு ஒருவரே இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பயன்படுத்திய கணனியில் 7 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சிறுமிகளின் சுமார் 1500 நிர்வாணக் காட்சிகளை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்ததுடன், அதில் 80 சதவீதம் பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பதும்  தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு அப்ளிகேஷன்கள் மூலம் பிறரால் வெளியிடப்படும் நிர்வாண காட்சிகளை தான் சேகரித்து அதை விநியோகம் செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் தான் காணொளி காட்சிகளை விற்று சம்பாதிக்கும் பணத்தை அப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதோடு, சிறு வியாபாரமாக கிராபிக்ஸ் காட்சிகளை தயாரித்து விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தை வரவு வைப்பதாக வங்கிக் கணக்கின் உரிமையாளரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version