Site icon Tamil News

நாடு திரும்புகின்றார் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது வருகையின் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், தேர்தல் நெருங்கிய பின்னர்  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என  அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பலவீனமான வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான பட்சத்தில் தாம்  கட்சியை விட்டு வெளியேற நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version