Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் – சோதனையிட்ட சிக்கிய பொருட்கள்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்த சிகரெட்டின் மதிப்பு 35 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியானதென அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் ஒருமுறை சந்தேகத்திற்குரிய பெண் சிகரெட்டை எடுத்துச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் 12 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version