Site icon Tamil News

ஜெர்மனி விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

ஜெர்மனியின் முன்சன் விமானம் நிலையம் ஊடாக கடவு சீட்டு இன்றி பெண் ஒருவர் பயணம் மேற்கொள்ள முற்பட்டுள்ளார்.

குறித்தை பெண்ணை பொலிஸார் சம்ப இடத்திலேயே கைது செய்துள்ளனர். முன்சன் விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள முயன்ற அமெரிக்க பெண் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தன்னிடம் கடவு சீட்டு இல்லாமல் அமெரிக்காவிற்கு விமானம் நிலையம் ஊடாக பயணம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

அதாவது இவரிடம் தகுந்த கடவு சீட்டு இல்லை என்றும் இவர் கிரேக்க நாட்டில் இருந்து பயணம் மேற்கொண்ட போது இவரது கடவு சீட்டு தொலைந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் குறித்த பெண்ணிடம் கடவு சீட்டை கேட்ட பொழுது இவர் பொலிஸாருக்கு 100 அமெரிக்க டொலர்களை வழங்க முயற்சித்துள்ளார்.

பின்னர் பொலிஸார் இதனை வாங்க மறுத்ததாகவும் இவருக்கு எதிராக உடனடியாக வழக்கு விசாரணை ஆரம்பித்ததாகவும் தெரியவந்துள்ளது. பொலிஸார் தமது பாதுகாப்பு நிமித்தம் இவரிடம் இருந்து 1000 யூரோக்களை தண்ட பணமாக அறிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு விமானத்தின் ஊடாக தொடர்நது பயணிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version