கஹவத்தை ஓபாட தோட்டத்தின் மூன்றாம் பிரிவில் தேயிலை செடிகளுக்கு உரமிட்டு கொண்டிருந்த பெண்கள் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
46 வயதான தமிழ்ச்செல்வி என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக பாரிய மரம் விழுந்ததுடன், மரத்தடியில் இருந்த மூன்று பெண்களையும் தோட்டத் தொழிலாளர்கள் குழுவினால் வெளியே இழுத்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர்களில் ஒருவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரம் விழுந்த இடம் தொலைதூரப் பகுதியில் உள்ள கடினமான சாலையில் அமைந்திருந்ததால், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சுமார் ஒரு மணி நேரம் ஆனது.