Site icon Tamil News

சிங்கப்பூரில் கொள்வனவு செய்யப்பட்ட பர்க்கர்களால் கடும் கோபத்தில் பெண்

சிங்கப்பூரில் உள்ள Punggol Plazaவில் அமைந்துள்ள McDonald’s உணவகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பர்க்கர்களினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பெண் ஒருவர், இறைச்சி சேர்க்கப்பட்ட பர்க்கர்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்பு, அதனை சாப்பிட முயன்ற போது, இறைச்சி சரியாக வேகாமல் இருந்துள்ளதையும், பர்க்கர் சரியாக சமைக்கப்படாமல் இருந்துள்ளதையும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், இது குறித்து அந்த பெண், 04- ஆம் திகதியன்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, அந்த மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் மேனேஜர், சம்மந்தப்பட்ட பெண்ணிற்கு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்தார்.

“நீங்கள் வாங்கிய பர்க்கருக்கான முழு தொகையும் திருப்பி வழங்கப்படும். ஏற்கனவே வாங்கி சாப்பிட்ட பர்க்கரால் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அதற்கான செலவையும் நாங்களே ஏற்கிறோம். இதுப் போன்று இனி நடக்காது” என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இந்த சலுகையை ஏற்க மறுத்த பெண், சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு (Singapore Food Agency) இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

Exit mobile version