Site icon Tamil News

03 சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை அறிவித்த அமெரிக்கா!

சீனாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் மேற்கொள்ளும் பால்ஸ்டிக் ஏவுகணை பரிசோதனை திட்டத்திற்கு தேவையான ஆயுதங்களை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் டெக்னாலஜி லிமிடெட், பெய்ஜிங் லுவோ லுவோ டெக்னாலஜி டெவலப்மென்ட் கோ லிமிடெட் மற்றும் சாங்சோ உடெக் கம்போசிட் கம்பெனி லிமிடெட் என்ற மூன்று நிறுவனங்கள் மீதே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் என்பதை நிரூபிக்கிறது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Exit mobile version