தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பார் என
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் குறிப்பிடுகின்றார்.
மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, நிமல் லான்சா, ரொஷான் ரணசிங்க போன்ற குழுக்கள் இன்று பல்வேறு கூட்டணிகளை அமைத்து வருவதாகவும் எனினும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது உருவாக்கப்பட்டுள்ள அனைத்து கூட்டணிகளும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவுடன் இணையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுர மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதால், சமகி ஜனபலவேக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என அவர் மேலும் தெரிவித்தார்.