Site icon Tamil News

அமெரிக்காவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்திய காட்டுத்தீ – 4 லட்சம் ஏக்கர் காடுகள் அழிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 லட்சம் ஏக்கர் காடுகளை காட்டுத்தீ அழித்துள்ளது.

மேலும் பரவாமல் தடுக்க, அப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்களை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 24-ஆம் திகதி, வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்த காரை அதன் உரிமையாளர் 60 அடி ஆழ பள்ளத்தில் தள்ளிவிட்டதால் காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது கலிபோர்னியா வரலாற்றில் 4-வது மிகப்பெரிய காட்டுத்தீ எனவும், தலைநகர் லாஸ் ஏஞ்செல்ஸை விட அதிக பரப்பளவு காடுகள் காட்டுத்தீக்கு இரையாகிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version