கிரீஸ் தலைநகரின் வடக்கு எல்லையில் கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் பெரும் காட்டுத் தீயை நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுவர் வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலையில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மாரத்தான் மற்றும் பல ஏதென்ஸின் புறநகர்ப் பகுதிகள் உட்பட ஏதென்ஸைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றுமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்நிலையில் புறநகர்ப் பகுதிகளில் அதிகாரிகள் வெளியேற்றப்பட்டவர்களுக்காக விளையாட்டு அரங்குகள் மற்றும் ஹோட்டல் அறைகளைத் திறந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.