கனடாவில் காட்டுத் தீயை அணைக்க வரவழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் ஆடியும் பாடியும் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர்.
கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
காட்டுத் தீயை விரைவாகக் கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்காவில் இருந்து 200 வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
எட்மண்டன் நகருக்கு வந்த வீரர்கள், தங்கள் உடைமைகளுடன் விமான நிலையத்தில் நடனமாடினர்.
தங்களை உற்சாகப்படுத்தும் விதமாக, தீயணைப்புத் துறையில் நுழைவதற்கு முன்பு தங்கள் மகிழ்ச்சியைக் காட்ட தென்னாப்பிரிக்கக் கொடிகளை ஏந்தியபடி பாரம்பரிய நடனம் ஆடினர்.என்பது குறிப்பிடத்தக்கது.