Site icon Tamil News

ரோட்ஸ் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – 10 ஆயிரம் பிரித்தானியர்கள் சிக்கி தவிப்பு!

கிரேக்கத் தீவின் சில பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில், அங்கு 10 ஆயிரம் பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயண நிறுவனமான Tui ரோட்ஸிலிருந்து “மூன்று பிரத்யேக விமானங்களில்” பிரித்தானிய சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தற்போது ரோட்ஸில் ஏழாயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையிலான சுற்றுலா பணிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version