Site icon Tamil News

பிரபல நடிகரின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

பிரபல நடிகர் கவிங்க பெரேராவின் முன்னாள் மனைவி என தெரிவிக்கப்படும் 37 வயதுடைய பெண் ஒருவர், ஆகஸ்ட் 5 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட பயணத்தடையை தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குருநாகலை வசிப்பிடமாகவும், தொழில் ரீதியாக வைத்தியருமான குறித்த பெண், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் இந்தியாவின் புது டெல்லியில் இருந்து வந்தடைந்த போது காலை 8:50 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Exit mobile version