Site icon Tamil News

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் : மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

ஆட்சியாளர்களுக்கு தேவையான நேரத்தில் சரியான அறிவுறுத்தல்களை வழங்காததன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் கோவிட் காலத்தில் நாடு மூடப்படும் போது முதலீடுகள் வராது என்பது நமக்குத் தெரியுமா? வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருமானம் பூஜ்ஜியத்திற்கு சென்றது. கோவிட் நிலைமை இதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? என சாகார காரியவசம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version