Tamil News

இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா? வெளியான சுவாரசியம்

எத்தனை ஷோக்கள் வந்தாலும், ஒரு சமையல் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மக்கள் மனதில் இடம்பிடித்தது தான் விஜய் டிவியின் குக் வித் கோமாளி.

சமையலையும், சிரிப்பையும் ஒரு சேர கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த இந்த ஷோ வெற்றிகரமாக 5ஆவது சீசனுக்கு வந்து விட்டது.

எந்த சீசனிலும் நடக்காத ஒரு பூகம்பம் இந்த சீசனில் வெடித்தது என்று கூறினால் மிகையாகாது.

4 சீசன்கள் வரை கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை 5வது சீசனில் தொகுப்பாளராக களமிறங்கினார்.

அவருக்கு மிகவும் பிடித்த இந்த வேலையை அவர் ரசித்து செய்ய பின் அதில் பிரச்சனையும் வந்தது, இதனால் ஷோவை விட்டு வெளியேறிவிட்டார்.

அதன்பின் அவர் வெளியிட்ட ஒரு வீடியோ இப்போது பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

இன்னும் 5வது சீசன் முடிவுக்கு வரவில்லை, சில எபிசோடுகள் ஒளிபரப்பானதும் முடிவை எட்டுகிறது. அதற்குள் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார்.

தற்போது அவருக்கு பதில் 5வது சீசனில் தொகுப்பாளராக புகழ் மற்றும் விடிவி கணேஷ், ரக்ஷ்னுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

ஆனால் இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சிலர் ரக்ஷனை வைத்து மட்டுமே கூட நிகழ்ச்சியை முடித்திருக்கலாமே என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version