Site icon Tamil News

விவசாயிகளின் பிரச்சினைக் குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

அரசியல் ரீதியாக பிரிந்திருந்தாலும், இயற்கை விடையத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது விவசாயிகளின் பிரச்சினை குறித்து கருத்து வெளியிட்ட அவர்,  விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் என்ன எனவும், தண்ணீர் பிரச்சினைக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வு குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன்  இது குறித்து நாடாளுமன்ற குழு கூட்டத்தில் விவாதிப்போம் என நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தோழர் அநுர திஸாநாயக்க ஆகியோருக்கு நான் கூறுகின்றேன், இந்தப் பிரச்சினையை விமர்சனமின்றி எதிர்கொள்ள நடைமுறை மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர்,  அரசியல் ரீதியாக பிரிந்தாலும் இயற்கையை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version