Site icon Tamil News

பிரித்தானியாவில் வார இறுதியில் மூடபடவுள்ள நெடுஞ்சாலை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் M25 பாதை மூடப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பின்பற்ற பரிந்துறைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மாற்று வழிகளை பின்பற்றும்போது கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

M25 பாதையானது வரும் வெள்ளிக்கிழமை (10.05)   இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை (Surrey) சர்ரே  சந்தியின் இரு திசைகளிலும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறுகிய மாற்று வழிகளைக் கண்டறியும் முயற்சியில் திசைதிருப்பல் அறிகுறிகளைப் புறக்கணிக்கும் எவரும் தினசரி £12.50 ULEZ கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை குறைந்த உமிழ்வு தரநிலைகளை சந்திக்கும் கார்களுக்கு இது பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version