Site icon Tamil News

பிரான்ஸ் தலைநகரில் அதிர்ச்சி – அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன்

பிரான்ஸ் தலைநகரில் அதிர்ச்சி – அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன

பாரிஸ் தலைநகரில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் A1 நெடுஞ்சாலைக்கு அண்மித்த பகுதியில் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சனிக்கிழமை இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைக்கு அடிமையான இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில் “கொலை செய்யப்பட நபர் தகராறில் இருந்து தப்பித்து ஓட முற்பட்ட வேளையில் கொலைக்கு காரணமான நபர் அவரை இரும்பு கம்பியால் தலையில் அடித்தே கொலை செய்தார் ” என குறிப்பிட்டுள்ளார்.

தகராறில் ஈடுபட்ட இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்த அகதிகள் என தெரியவருகிறது.

Exit mobile version