Site icon Tamil News

அமெரிக்காவை உலுக்கிய காலநிலை – குழந்தைகள் உட்பட 15 பேர் பலி

அமெரிக்காவில் பல மாநிலங்களை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸ், ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸ் ஆகிய நகரங்கள் கடுமையான வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காயமடைந்த பலர் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டல்லாஸின் வடக்கே இருந்து ஆர்கன்சாஸின் வடமேற்கு மூலை வரையிலான பகுதியில் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்திய புயலுக்கு முன்னதாக மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

அமெரிக்காவை பாதித்துள்ள இந்த காலநிலை காரணமாக பல வீடுகளும் இடிந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் வெளியூர் திருமணத்திற்கு வந்தவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version