கனேடிய சுற்றுலா பயணிகளை கவனமுடன் இருக்குமாறு கனடா அரசாங்கம் எச்சரித்துள்ளது.
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்தியாவிற்கு சுற்றுலா செல்வோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்திய கனடா அரசு, சில இடங்களில் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
அஸ்ஸாம், மனிப்பூர், ஜம்மு கஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.