கமலா ஹாரிஸ் ஜனாதிபதிக்கான பிரச்சாரத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் வன்முறை அச்சுறுத்தல்களை விடுத்ததாக வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வின்செஸ்டரைச் சேர்ந்த 66 வயது ஃபிராங்க் கரிலோ,ஒரு பழமைவாத மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான GETTR இல் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் செய்திகள் தொடர்பாக நீதிமன்றத்தை எதிர்கொண்டார்.
கரிலோ ஆகஸ்ட் 2 அன்று கைது செய்யப்பட்டார். FBI முகவர்கள் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் AR15 பாணி துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்களை கைப்பற்றினர்.
கரிலோ, ஹாரிஸுக்கு எதிராக “தெரிந்தே மற்றும் வேண்டுமென்றே உயிரைப் பறிப்பதற்காகவும், உடலுக்கு தீங்கு விளைவிப்பதற்காகவும் அச்சுறுத்தல் விடுத்தார்” என்று புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.