Tamil News

விடாமுயற்சி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மீண்டும் ஆரம்பிக்கப்போகிறதாம்

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது.

அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். அநேகமாக இன்னும் சில வாரங்களில் மீண்டும் அஜர்பைஜானிலேயே ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின.

மேலும் படக்குழுவும் அங்கு செல்வதற்கான வேலைகளை லைகா தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஏப்ரல் 10ஆம் தேதி மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கமிட்டாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.

எனவே அதற்குள் விடாமுயற்சி ஷூட்டிங்கை முடிக்கும்படி அஜித் கேட்டுக்கொண்டதாகவும்; ஏப்ரல் 10ஆம் தேதி ஷூட்டிங்கை தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க லைகா திட்டமிட்டிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.

Exit mobile version