90களில் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த நடிகை ரம்பா, தனது மூத்த மகளின் சமீபத்திய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
தாய் மகளுக்கு இடையேயான விசித்திரமான ஒற்றுமையால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ரம்பா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரது கவர்ச்சியான நடிப்பு இன்னும் ரசிகர்களைக் கொண்டுள்ளது.
ரம்பா கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு தற்போது வெளிநாட்டில் குடியேறியுள்ளார்.
தம்பதியருக்கு லாவண்யா, சாஷா என்ற இரண்டு மகள்களும், ஷிவின் என்ற மகனும் உள்ளனர். இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவிடுவார்.
ரம்பா தற்போது இன்ஸ்டாகிராமில் தனது மூத்த மகள் லாவண்யா பள்ளி நிகழ்வில் உரை நிகழ்த்தி வெற்றிக் கோப்பையை பெறும் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பாரம்பரியமாக உடையணிந்து, கண்ணாடி அணிந்து, லாவண்யா தனது அம்மாவைப் போன்று இருப்பது ரசிகர்களையும் பின்தொடர்பவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.