Site icon Tamil News

இந்த முறை BB – 7 வந்த ஏழரை இவர்தான்… வணிதா

வனிதா 1990-ம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்தார்.

பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு இரண்டு திருமணம் செய்தார் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை.

தற்பொழுது தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நடந்து வருகிறது. இதில் இவரது மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.

இதில் அவருடன் 17 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது குறித்து ஒரு பேட்டியில் நடிகை வனிதா, “ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு ஏழரை கொண்டுவரப்படுவார்.

இந்த முறை அந்த ஏழரை கூல் சுரேஷ்தான். கூல் சுரேஷ் செய்வது எதுவுமே எதார்த்தமானதாக இல்லை. தனக்கென்று அவர் ஒரு ஸ்டேட்டர்ஜியை வைத்திருக்கிறார். அவர் அதன்படிதான் விளையாடி வருகிறார்.

இவரை பார்க்கும்போது கடந்த சீசனில் கலந்துகொண்ட ஜிபி முத்துவும் இவரும் ஒன்று என்று தோன்றுகிறது.

ஆனாலும் ஜிபி முத்துவை ஏழரை என்று கூற முடியாது. அவர் நல்ல மனிதர்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version