Site icon Tamil News

காணாமல் போன இளைஞரை கடத்த பயன்படுத்திய வேன் `மீட்பு

காணாமல் போனதாக கூறப்படும் குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளம் வர்த்தகரை கடத்த பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் இன்று மாத்தளை வில்கமுவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை கொண்டு வந்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலியின் வீட்டிற்கு செல்வதாக கூறிய இந்த இளம் வர்த்தகர் கடந்த 22ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

தற்போது சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காதலியின் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Exit mobile version