Site icon Tamil News

பாகிஸ்தானில் தீபிடித்து எரிந்த வேன் – 07 பேர் பலி!

பாகிஸ்தானில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் சர்கோதா பகுதியில்  இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதன்போது வேனில் 20 பேர் பயணம் செய்ததாகவும், அவர்களில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version