மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதன்முறையாக வடிவேலு இணைந்திருப்பது இதுவே முதன்முறையாகும். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
யுகபாரதியின் வரிகளுடன் வைகை புயல் வடிவேலு இதை பாடியுள்ளார். ‘இராச கண்ணு’ ஒரு குலத்தின் அவலத்தைப் பற்றிய துக்கப் பாடலாக ஒலிக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் நடனமாடும் சில காட்சிகளுடன் வீடியோ முடிகிறது. முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்கு முன், அவரது நடிப்பு வாழ்க்கையில் இதுவே கடைசி படம் என்று கூறப்படுகிறது.
சாண்டி மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். மாமன்னன் ஜூன் மாதம் 29 அன்று திரைக்கு வர உள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பை மேற்கொண்டார்..
“பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில்
அலையடிக்கிறது கடல் “#RaasaKannu first single from #MAAMANNAN
Out today 5 pm
Music by @arrahman
Sung by #Vadivelu@mari_selvaraj @Udhaystalin @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction… pic.twitter.com/MCVk7hyQrF— Mari Selvaraj (@mari_selvaraj) May 19, 2023