Site icon Tamil News

இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல் !

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற இணையத்தளமான www.parliament.lk இல் உள்ள தகவல்களுக்கு இணங்க விண்ணப்பங்கள் ‘NPCக்கு உறுப்பினர்களை நியமித்தல்’ என்ற விரைவு இணைப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ‘அரசியலமைப்புச் சபையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புச் சபை அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே’ என்ற முகவரிக்கு 01 ஜூலை 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்ள பின்வரும் இணையத்தளத்தை பார்வையிடவும்

Exit mobile version