Site icon Tamil News

வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிய அமெரிக்கா

உலகை அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பல்வேறு நாடுகள், வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்து இருந்தன. மேலும், கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும், உலக நாடுகள் விதித்திருந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.

இந்த நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை கூறும்போது, அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் மே 11 முதல் நீக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.

Exit mobile version