Site icon Tamil News

தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழப்பு

வாஷிங்டன் டிசியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் முன் அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

அந்த நபர் டெக்சாஸின் சான் அன்டோனியோவைச் சேர்ந்த 25 வயதான ஆரோன் புஷ்னெல்என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டது.

அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் அமெரிக்க இரகசிய சேவையின் அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

தீக்குளிக்கும் முன், “இனி இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.

அவர் “ஒரு தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக” கூறினார். தனக்குத் தானே தீக்குளித்துக்கொண்ட பிறகு, “பாலஸ்தீனத்தை விடுதலை செய்” என்று பலமுறை முழக்கமிட்டார்.

வாஷிங்டனில் உள்ள பெருநகர காவல் துறை “வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை” என்று கூறியது.

இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Exit mobile version