Site icon Tamil News

நேட்டோவில் சேர உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படாது – ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்!

அடுத்த மாதம் நடைபெறும் உச்சிமாநாட்டில் உக்ரைனை கூட்டணியில் சேர நேட்டோ அழைப்புவிடுக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை நடுப்பகுதியில் வில்னியஸில் நடைபெறும் உச்சிமாநாட்டில் நேட்டோ தலைவர்கள் உக்ரைனை கூட்டணியில் சேர அழைக்க மாட்டார்கள் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்.

“வில்னியஸ் உச்சிமாநாட்டில் மற்றும் உச்சிமாநாட்டிற்கான தயாரிப்புகளில், நாங்கள் முறையான அழைப்பை வெளியிடுவது பற்றி விவாதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், உக்ரைனை நேட்டோவுடன் எவ்வாறு நெருக்கமாக நகர்த்துவது என்பது பற்றி தலைவர்கள் பேசுவார்கள் என்று அவர் கூறினார்.

“இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் ஒரு நியாயமான சமாதானம் என்பது மோதலை முடக்குவது மற்றும் ரஷ்யாவால் கட்டளையிடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்காது என்றும் அவர் கூறினார்.

Exit mobile version