Site icon Tamil News

இத்தாலியின் கலாப்ரியா பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இருந்து 1400இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்பு!

இத்தாலிக்கு அப்பால் உள்ள மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து 1400இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இத்தாலிய தீபகற்பத்தின்  கலாப்ரியா பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் பாய்மரக்கப்பலில் பயணித்த புலம்பெயர்ந்தோரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாய்மரக் கப்பலில் இரண்டு குழந்தைகள் உள்பட 47 பேர் இருந்ததாகவும் கடலோர காவல் படையினர் இன்று (07) தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மீன்பிடி படகில் இருந்து சுமார் 590 புலம்பெயர்கள் இருந்ததாகவும், மற்றுமோர் மீன்பிடி படகில் 650 பேர் இருந்ததாகவும் அதிகாரிகள் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவர்களை மீட்கும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை (05) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று  வரை நீடித்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்த கப்பல்களால் எடுக்கப்பட்ட பயணிகள் அல்லது வழித்தடங்கள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் உடனடியாக வழங்கவில்லை.

ஆனால் பொதுவாக, அயோனியன் கடலில் இருந்து புலம்பெயர்ந்தோருடன் பல படகுகள் துருக்கியின் கடற்கரையிலிருந்து புறப்படுகின்றன, அங்கு கடத்தல்காரர்கள் நெரிசலான மற்றும் கடலுக்குத் தகுதியற்ற படகுகளில் பயணங்களைத் தொடர்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version