Site icon Tamil News

ரஷ்யாவின் உள்ள எண்ணெய் ஆலை மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்; மூவர் பேர் பலி!

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபடுகின்றன. அந்தவகையில் ரஷ்யாவின் ரோவென்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் அங்குள்ள ஒரு எண்ணெய் ஆலை தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்குள்ள வீடுகள், வாகனங்கள் போன்றவை சேதமடைந்தன. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

அந்த எண்ணெய் ஆலையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. எனினும் அங்கு வேலை பார்த்த 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

Exit mobile version