புனித திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் அவர்கள் தனது பாரம்பரிய ஈஸ்டர் செய்தியை நேற்று காசா மக்களுக்கு அர்ப்பணித்தார்.
அந்த செய்தியில், காசா பகுதியில் போர் நிறுத்தத்தை கொண்டு வருவதற்கு பொறுப்பான தரப்பினருக்கு அழைப்பு விடுப்பதாக அவர் கூறினார்.
ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதி என்பது ஆயுதங்களால் உருவாக்கப்படுவதில்லை என்பதை புனித திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.