Site icon Tamil News

ரஷ்யா மீது புதிய குற்றச்சாட்டை முன்வைக்கும் உக்ரைன்

கடந்த வாரம் ரஷ்யப் படைகள் தரைவழித் தாக்குதலை நடத்திய வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள எல்லை நகரமான வோவ்சான்ஸ்கில் பொதுமக்களைக் கைது செய்து கொன்றதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

“ரஷ்ய துருப்புக்கள் பொதுமக்களை கைதிகளாக பிடிக்கின்றன” என்று உள்துறை அமைச்சர் இகோர் க்ளைமென்கோ டெலிகிராமில் ஒரு பதிவில் தெரிவித்தார்.

பிராந்திய பொலிசார் குற்றச்சாட்டுகள் குறித்து “போர்க்குற்றங்கள்” விசாரணையைத் தொடங்கியுள்ளனர், என்று கிளைமென்கோ தெரிவித்தார்.

ரஷ்யப் படைகள் திடீர் தரைவழித் தாக்குதலில் எல்லையைத் தாண்டி விரைந்ததில் இருந்து ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 9,000 பேரை உக்ரைன் வெளியேற்றியுள்ளது குறிப்பித்தக்கது.

Exit mobile version