Site icon Tamil News

தாக்குதல்களை தீவிரப்படுத்திய உக்ரைன் : ரஷ்ய எல்லைப் பகுதியில் அவசரநிலை பிரகடனம்

ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோட் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

உக்ரேனியப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கோள்காட்டி அதன் ஆளுநர் மேற்படி அறிவித்துள்ளார்.

டெலிகிராம் செயலியில் வெளியிடப்பட்ட வீடியோவில் வியாசஸ்லாவ் கிளாட்கோவ், “பெல்கோரோட் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாகவும் பதட்டமாகவும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

தினசரி ஷெல் தாக்குதல்கள் வீடுகளை அழித்ததாகவும், பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version