Site icon Tamil News

ஹெய்ட்டி ஜனாதிபதியின் படுகொலை! மனைவி மீது குற்றச்சாட்டு

போர்ட்-ஆ-பிரின்ஸ்- ஹைட்டி ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் படுகொலையில் தொடர்புடைய பல குற்றவாளிகளுடன் ஜனாதிபதியின் மனைவியும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஜனாதிபதி 2021 இல் படுகொலை செய்யப்பட்டார்.

உள்ளூர் ஊடகங்களுக்கு கசிந்த ஆவணத்தின்படி, விசாரணைக்கு பொறுப்பான ஹைட்டி நீதிபதி, ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸின் மனைவி மற்றும் முன்னாள் பிரதமர் உட்பட 50 பேர் மீது குற்றஞ்சாட்டினார்.

iibopost ஆல் பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்களின் 122 பக்கங்களை மேற்கோள் காட்டி, நீதிபதி வால்டர் வெசர் வால்டேர், முன்னாள் பிரதமர் கிளாட் ஜோசப்புடன் சேர்ந்து ஜனாதிபதியைக் கொல்ல சதி செய்தமை கண்டுப்பிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

ஜூலை 7, 2021 அன்று இரவு, போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தின் படுக்கையறைக்குள் புகுந்த துப்பாக்கிதாரிகளால் ஜோவனெல் மொய்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் முன்னாள் முதல் பெண்மணி மார்ட்டின் மோயஸும் காயமடைந்தார். குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version