Site icon Tamil News

ரஷ்யாவில் உள்ள பாலங்களை அழித்த உக்ரைன்!

கியேவின் படைகள்  சேம் ஆற்றின் மீது உள்ள மூன்று பாலங்களையும் அழித்ததாகவோ அல்லது சேதப்படுத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.

மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனின் ஊடுருவல் நேற்று மூன்றாவது வாரத்தை எட்டிய நிலையில் இந்த குற்றச்சாட்டு வந்துள்ளது.

இந்த நடவடிக்கையானது நதி, உக்ரேனிய முன்னேற்றம் மற்றும் உக்ரேனிய எல்லைக்கு இடையில் ரஷ்யப் படைகளை சிக்க வைக்கும்.

அதேநேரம் வார இறுதியில் உக்ரைனின் விமானப்படைத் தளபதி செம் மீது பாலங்கள் தாக்கப்பட்ட இரண்டு வீடியோக்களை வெளியிட்டார்.

இந்நிலையில் இது குறித்து ஆராய்ந்துள்ள புலனாய்வாளர்கள் உக்ரைன் ஒரு பாலத்தை முற்றாக அழித்துள்ளதாகவும் மேலும் இரு பாலங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version