Site icon Tamil News

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய்க்கு மருத்துவம் பார்த்த எகிப்தியர்கள்!

பண்டைய எகிப்தியர்கள் புற்றுநோய் செல்கள் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைய எகிப்தியர்கள் மருத்துவத்தில் விதிவிலக்காக திறமையானவர்கள் என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிந்திருந்தனர்.

மருத்துவர்களின் எண்ணங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தற்போதைய ஆதாரம் கிடைத்துள்ளது.

சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு இரண்டு மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்தது. ஒன்று கிமு 2687 மற்றும் 2345 க்கு இடைப்பட்டது எனவும், 30 வயதுடைய ஆணுடையதாக இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.

அதேபோல் மற்றொன்று கிமு 663 – 343 க்கு இடைப்பட்டது எனவும் 50 வயதுடைய பெண்ணுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

ஆணின் மண்டை ஓட்டில், நுண்ணிய அவதானிப்பு, அதிகப்படியான திசு அழிவு மற்றும் சுமார் 30 மெட்டாஸ்டேஸ் செய்யப்பட்ட புண்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் மண்டை ஓட்டில் எலும்பு அழிவுக்கு வழிவகுத்த புற்றுநோய் கட்டியுடன் கூடிய பெரிய காயம் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆய்வின் முதன்மை எழுத்தாளர் பேராசிரியர் எட்கார்ட் கமரோஸ், சாண்டியாகோ டி காம்போஸ்டெலா, இந்த கண்டுபிடிப்பு பண்டைய எகிப்திய மருத்துவம் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயை எவ்வாறு சமாளிக்க அல்லது ஆராய முயற்சித்திருக்கும் என்பதற்கு தனித்துவமான சான்று எனக் கூறியுள்ளார்.

இது புற்றுநோய்க்கான மருந்தை கண்டுப்பிடிப்பதற்கு முன்னோடியாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை தற்போது நவீன வாழ்க்கை முறைகள், நீண்ட காலம் வாழ்பவர்கள் மற்றும் சுற்றுச்சூழலில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் அனைத்தும் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயானது பொதுவானது என்பதை இது குறிக்கலாம் என ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

Exit mobile version