Site icon Tamil News

ஹரக் கட்டா தப்பிச்செல்ல முயற்சி: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலகக்குழு உறுப்பினருமான ‘ஹரக் கட்டா’ தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உதவி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

அதன்படி, குறித்த இருவரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலும், சந்தேகநபர்களுடன் மோட்டார் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டா எனப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நதுன் சிந்தக கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உதவியுடன் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version