Site icon Tamil News

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் தமிழ் கைதிக்கு கொலை மிரட்டல் விவகாரம் : அமைச்சருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் பிரவேசித்து தமிழ்க் கைதி ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி லொஹான் ரத்வத்தை வரும் 14 ஆம் திகதி அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை,  அங்கிருந்த தமிழக் கைதி ஒருவக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதே,  பிரதான நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

 

Exit mobile version