Site icon Tamil News

இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இரு இலங்கையர்கள் பலி

இத்தாலியின் தலைநகர் ரோம் -கொர்னேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரோம் நகரில் வசிக்கும் 25 வயதுடைய Marco என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்சார ஸ்கூட்டரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த இந்த இளைஞன் கடந்த 21ஆம் திகதி இரவு வீதியில் சென்ற வேன் மீது மோதியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரோம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இத்தாலியின் பெர்கமோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மற்றுமொரு இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேர்காமோவை வசிப்பிடமாகக் கொண்ட சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Exit mobile version